/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க 14 நாட்களுக்கு பிறகு அனுமதி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க 14 நாட்களுக்கு பிறகு அனுமதி
கும்பக்கரை அருவியில் குளிக்க 14 நாட்களுக்கு பிறகு அனுமதி
கும்பக்கரை அருவியில் குளிக்க 14 நாட்களுக்கு பிறகு அனுமதி
ADDED : ஆக 27, 2024 05:43 AM

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் 14 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து சீரானதால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்தனர்.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆக. 12 முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆக.25 ல் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதனை கண்காணித்த வனத்துறையினர் 14 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். பெரியகுளம் பகுதியில் வெயில் தாக்கம் அதிக அளவு இருந்த நிலையில் கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.