/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க தடை
/
யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க தடை
யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க தடை
யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க தடை
ADDED : ஜூலை 02, 2024 06:32 AM
கம்பம் : சுருளி அருவி அருகே யானைகள் கூட்டம் நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
சுருளி அருவியில் குளிக்க தினமும் நூற்றுக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேகமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் அருவி பகுதிக்கு சென்ற போது, அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிப்பறைக்கு அருகில் குட்டிகளுடன் யானை கூட்டம் நின்றுள்ளது.
யானை கூட்டத்தை பார்த்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.
இது தொடர்பாக கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், யானைகள் அருவி அருகே முகாமிட்டுள்ளது. வனப்பகுதிக்குள் நகர்ந்து சென்றால் தான் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றார்