ADDED : பிப் 24, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
விழா தொடர்பாக பா.ஜ., சார்பில் முன்னாள் மாவட்டத் தலைவர் லோகன்துரை தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், 'இந்த குழு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா, பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்யப்படுகிறதா, ஹிந்து பக்தர்கள் உணர்வுகளை பாதிக்கும் வகையில் ஏதேனும் செய்யப்படுகிறதா' என, ஆய்வு செய்து கட்சி சார்பில் கலெக்டர், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசாரிடம் அறிக்கையாக வழங்குவர்.' என, தெரிவித்தார்.

