sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பறவைகள் கணக்கெடுப்பில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு

/

பறவைகள் கணக்கெடுப்பில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு

பறவைகள் கணக்கெடுப்பில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு

பறவைகள் கணக்கெடுப்பில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு


ADDED : மார் 01, 2025 06:00 AM

Google News

ADDED : மார் 01, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மார்ச் 8, 9ல் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிலும், மார்ச்.15, 16ல் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் பங்கேற்க உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்யலாம்.'என, மாவட்ட வனத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 8, 9 (சனி, ஞாயிறு) நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும், மார்ச் 15, 16ல் (சனி, ஞாயிறு) நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளும் நடக்க உள்ளன.தேனி மாவட்ட வன கோட்டம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 25 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 25 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. பணி காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடத்தப்பட உள்ளது. விருப்பமும், ஆர்வமும் உள்ள தன்னார்வலர்கள் இப்பணியில் கலந்து கொள்ளலாம்.

விரும்புவோர் முதல்வரின் பசுமை தோழர் பிரியங்காவை 97515 49317 என்ற அலைபேசியிலும், உயிரியலாளர் சூரஜ்குமாரை 63834 89107 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

பங்கேற்கும் அனைவருக்கும் வனத்துறை சார்பில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என வனத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us