sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஐந்து ஆண்டுகளாகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்

/

ஐந்து ஆண்டுகளாகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்

ஐந்து ஆண்டுகளாகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்

ஐந்து ஆண்டுகளாகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்


ADDED : ஆக 18, 2024 07:09 AM

Google News

ADDED : ஆக 18, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : லோயர்கேம்ப் கூட்டாறு பாலம் சேதமடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் பொதுப்பணித்துறையினர் சீரமைக்காததால் விவசாயிகள் புலம்பியுள்ளனர்.

கூடலுார் அருகே லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து வாய்க்காலின் துவக்கப் பகுதியில் கூட்டாறு பாலம் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கனமழையால் பாலம் உடைந்து சேதம் அடைந்தது. இதனால் கண்மாய்க்கு நீர்வரத்தில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பாலத்தில் இருந்து கண்மாய் வரை உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து விவசாயிகள் பலமுறை நீர்வளத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதை சீரமைக்காமல் 18ம் கால்வாயில் இருந்து தண்ணீர் வரும் வகையில் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வழக்கமாக கூட்டாறு பாலும் வழியாக நீர் வரத்து இருக்கும்போது வாய்க்காலின் இரு பகுதிகளிலும் உள்ள மானாவாரி நிலங்கள் நிலத்தடி நீர்மட்டத்தால் பயன் பெற்று வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வாய்க்கால் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் புலம்பியுள்ளனர். விரைவில் கூட்டாறு பாலத்தை சீரமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வழிவகை செய்யும் வகையில் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us