sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

/

ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு


ADDED : ஜூலை 31, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தமிழகத்தில் லோக்சபாதேர்தலில் 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுப்பதிவான 2067 ஓட்டுச்சாவடி பகுதி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்.,19ல் நடந்த லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியது. ஆனாலும் ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுக்கள் பதிவானது. 1881 ஓட்டுச்சாவடிகளில் 40 முதல் 50 சதவீத ஓட்டுக்களும்,186 ஓட்டுசாவடிகளில் 40 சதவீதத்திற்கு குறைவாக ஓட்டுகள் பதிவானது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுப்பதிவான 2067 ஓட்டுச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் (பி.எல்.ஓ.,க்கள்) ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us