ADDED : ஏப் 21, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே ராசிங்கபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் வனராஜ் 63. இவர் நேற்று முன்தினம் டூவீலரில் நாகலாபுரத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார்.
வரும் வழியில் டூவீலரில் பிரேக் போட்டதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
பலத்த காயம் அடைந்த வனராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.

