sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குண்டேரி -- பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பால் சிரமம்

/

குண்டேரி -- பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பால் சிரமம்

குண்டேரி -- பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பால் சிரமம்

குண்டேரி -- பனங்கோடை பாதை ஆக்கிரமிப்பால் சிரமம்


ADDED : ஆக 25, 2024 05:10 AM

Google News

ADDED : ஆக 25, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே குண்டேரி - பனங்கோடை செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் விளை பொருட்களை கொண்டு வருவதற்கு விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்டவை குண்டேரி, பனங்கோடை மலைக் கிராமம். இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காபி, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பணப் பயிர்கள் பயிரிட்டு உள்ளனர்.

வனத்துறைக்கு மண் ரோட்டில் விவசாயிகள் நடந்து சென்று வந்தனர். தற்போது இப்பாதையின் இருபுறமும் முட்புதர்களாக சூழ்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்லவும், விளை பொருட்களை கொண்டு வர முடியாமல் சிரமம் அடைகின்றனர். குண்டேரி - பனங்கோடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பாதையை சீரமைத்திட வனத்துறையில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் குண்டேரி - பனங்கோடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதையை சீரமைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us