sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அடிமாலியில் பேரிடர் மீட்பு ஒத்திகை

/

அடிமாலியில் பேரிடர் மீட்பு ஒத்திகை

அடிமாலியில் பேரிடர் மீட்பு ஒத்திகை

அடிமாலியில் பேரிடர் மீட்பு ஒத்திகை


ADDED : மார் 01, 2025 06:19 AM

Google News

ADDED : மார் 01, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : இடுக்கி மாவட்டம் அடிமாலி ஊராட்சியில் லட்சம் வீடு காலனியில் பேரிடர் காலங்களில் கையாளும் மீட்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை தத்ரூபமாக நடந்தது.

கேரளாவில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு, மண் மற்றும் நிலச்சரிவுகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. அதனை குறித்து கேரள உள்ளூர் நிர்வாக அமைப்பான ' கிலா' ஆய்வு நடத்தி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்தது. அப்பகுதிகளில் பேரிடர் காலங்களில் கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தலைமையில் ஒத்திகை நடந்து வருகிறது.

அதன்படி தேவிகுளம் தாலுகாவில் மாங்குளம், ராஜாக்காடு, ராஜகுமாரி, வெள்ளத்தூவல், பைசன்வாலி, பள்ளிவாசல் ஆகிய ஊராட்சிகளை உட்படுத்தி அடிமாலி ஊராட்சியில் லட்சம் வீடு காலனியில் பேரிடர் ஒத்திகை நடந்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பது போன்று ஒத்திகை தத்ரூபமாக நடந்தது. அதற்கு 'சைரன்' ஒலி எழுப்பிய வகையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், வருவாய், தீயணைப்பு, சுகாதாரம், போலீஸ் உள்பட பல்வேறு துறையினர் ஒத்திகையில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us