sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தாக்கியவர்களை கைது செய்யக்கோரி டாக்டர், செவிலியர்கள் போராட்டம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

/

தாக்கியவர்களை கைது செய்யக்கோரி டாக்டர், செவிலியர்கள் போராட்டம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

தாக்கியவர்களை கைது செய்யக்கோரி டாக்டர், செவிலியர்கள் போராட்டம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

தாக்கியவர்களை கைது செய்யக்கோரி டாக்டர், செவிலியர்கள் போராட்டம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

1


ADDED : ஏப் 17, 2024 04:58 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 04:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்:L பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த இருவரை கைது செய்யக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சி தலைவர் பரமசிவம் மகள் கல்லூரி மாணவி திலகவதி 20. இவரை இவரது தாயார் திட்டியதால் ஏப்.12ல் விஷம் குடித்தார்.

சிகிச்சைக்காக பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதனை செய்த டாக்டர் முத்துமணி, செவிலியர்கள் கடல் மணி, அனிதா, முருகேஸ்வரி ஆகியோர் திலகவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது அந்தப் பெண்ணுடன் வந்த சில்வார்பட்டி சேர்ந்த வீரமணி 32. இவரது நண்பர் மனோஜ் குமார் 30 ஆகியோர் டாக்டர் மற்றும் செவிலியர்களை அவதூறாக பேசி தாக்கி, பணி செய்ய விடாமல் அச்சுறுத்தி,கொலை மிரட்டல் விடுத்தனர். இ.சி.ஜி., மிஷின்களை உடைத்தனர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் புகாரில், தென்கரை போலீசார் வீரமணி, மனோஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும் போலீசார் இருவரையும் கைது செய்யவில்லை.

தேனி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9:00 மணியிலிருந்து பணியினை புறக்கணித்து வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கரை இன்ஸ்பெக்டர் அமுதா, மருத்து இணை இயக்குனர் ரமேஷ் பாபு, கண்காணிப்பாளர் குமார், நிலைய அலுவலர் ராஜேசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து அதிரடியாக செயல்பட்ட போலீசார் வீரமணியை கைது செய்தனர்.

ஏப்.20 க்குள் மனோஜ் குமாரை கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு போராட்டம் வாபஸ் பெற்று டாக்டர்கள், செவிலியர்கள் பணிக்குத் திரும்பினர். இதனால் 3:30 மணி நேரம் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us