sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சூறாவளியால் போடிமெட்டு மலைப்பாதையில் பயணிகள் சிரமம்

/

சூறாவளியால் போடிமெட்டு மலைப்பாதையில் பயணிகள் சிரமம்

சூறாவளியால் போடிமெட்டு மலைப்பாதையில் பயணிகள் சிரமம்

சூறாவளியால் போடிமெட்டு மலைப்பாதையில் பயணிகள் சிரமம்


ADDED : ஜூலை 19, 2024 06:35 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : தமிழக, கேரளா பகுதியை இணைக்கும் போடிமெட்டு மலைப்பாதையில் வீசி வரும் சூறாவளி காற்றால் டூவீலர், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் எதிர்நோக்கி செல்ல முடியாமல் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தமிழக, கேரளாவை இணைக்கும் மூணாறு செல்லும் வழித்தடமான போடி முந்தல் ரோட்டில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் போடிமெட்டு மலைப்பகுதி அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் வருந்து சுமார் 4644 அடி உயரத்தில் போடிமெட்டு உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 18 அடி ரோடாக இருந்ததை 24 அடியாக அகலப்படுத்த பாறைகளுக்கு வெடி வைத்தும். வோக்வோம் டிரில்லர் மெஷின் மூலம் பாறைகள் அகற்ற பட்டதால் மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

போடிமெட்டு மலைப் பாதையில் ஜூன், ஜூலை மாதங்களில் பலத்த காற்று வீசி வருவது வழக்கம். டூவீலர், ஜீப், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் எதிர்நோக்கி செல்ல சிரமம் ஏற்படும். இந்நிலையில் நேற்று திடீரென வீசிய சூறாவளி காற்றால் போடிமெட்டு மலைப் பாதையில் ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்கள் எதிர் நோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் சென்ற பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். பலத்த காற்று வீசி வருவதையொட்டி போடிமெட்டு மலைப் பாதையில் வாகனங்களில் பயணிக்க பயணிகள் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us