/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
போடியில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 01, 2024 08:01 AM
போடி: போடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்து கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து வர துவங்கியது.
போடி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன. நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள், பருத்தி ஆகியவை பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நிலையில் மழை பெய்யததால் விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு போடி, குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம் பகுதியில் மின்னலுடன் கன மழை இரவு 11.30 மணி வரை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மலைப் பகுதியில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றிலும் நீர்வரத்து துவங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.