sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஊராட்சிகளில் மூலிகை நர்சரி அரசின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தல்

/

ஊராட்சிகளில் மூலிகை நர்சரி அரசின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தல்

ஊராட்சிகளில் மூலிகை நர்சரி அரசின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தல்

ஊராட்சிகளில் மூலிகை நர்சரி அரசின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தல்


ADDED : ஜூலை 27, 2024 05:19 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : அனைத்து ஊராட்சிகளிலும் நர்சரி அமைத்து அதில் மரக்கன்றுகள், மூலிகை செடிகள் வளர்க்க வேண்டும் என்ற அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகளை வளர்க்க நர்சரி அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. பெரும்பாலான ஊராட்சிகளில் இடம் இல்லை என்று கூறி நர்சரி அமைப்பதை தவிர்த்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஊராட்சிகளில் நர்சரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக நர்சரி ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகள் மட்டுமின்றி மூலிகை செடிகளும் வளர்க்க வேண்டும். அதை பொதுமக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ வீடுகளில் மூலிகை செடிகள் வழங்கி, வளர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

மூலிகைகளின் பயன்பாடுகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் தரலாம். நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களை நர்சரி பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம். கிடைக்கும் இடங்களில் ஊராட்சிகளே மரக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

ஆனால் ஊராட்சிகளில் நர்சரி அமைப்பது, மூலிகை செடிகள் வளர்ப்பதை ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு ஊராட்சியிலும நர்சரி அமைக்கவும், மூலிகை செடிகள் வளர்த்து பொதுமக்களுக்கு வழங்ககும் அரசின் உத்தரவை செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us