sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் பாசன நீர் திறப்பு

/

வைகை அணையில் பாசன நீர் திறப்பு

வைகை அணையில் பாசன நீர் திறப்பு

வைகை அணையில் பாசன நீர் திறப்பு


ADDED : மார் 01, 2025 02:55 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் வெளியேறுகிறது.

தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் சில நாட்கள் அணையில் இருந்து நீர் திறந்து விட்டும் சில நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது. பிப். 23ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் 61.84 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 111 கனஅடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us