ADDED : பிப் 15, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை நகர் ஈச்சமலை ரோட்டில் மும்மூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா பிப்.10ல் நடந்தது.
இதில் கூட்ட நெரிசலில் அதே பகுதி ராமசாமி மனைவி யசோதை , சீனிவாசன் மனைவி அமுதா, பன்னீர்செல்வம் மனைவி சரோஜா ஆகியோர் அணிந்திருந்த தலா 3 பவுன் தங்க செயின்கள் என ரூ.4 லட்சம் மதிப்பிலான 9 பவுன் தங்க செயின்களை மர்ம நபர்கள் நுாதன முறையில் திருடிச்சென்றனர்.
அவர்களை வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் தலைமையில் தனிப்படையினர் தேடுகின்றனர்.

