sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி மீண்டும் துவங்குமா

/

காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி மீண்டும் துவங்குமா

காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி மீண்டும் துவங்குமா

காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி மீண்டும் துவங்குமா


ADDED : மே 03, 2024 06:09 AM

Google News

ADDED : மே 03, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் துவக்குவது எப்போது என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானம்பிகை கோயில் மிகவும் புராதானமானது. தென் காளஹஸ்தி என்றழைக்கப்படும் இந்த கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது. ராகு கேது தம்பதி சகிதமாக தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். ஒவ்வொரு ஞாயிறும் ராகு காலத்தில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை இங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்கின்றனர்.

இந்த கோயில் திருப்பணிகள் சில ஆண்டுகளாக நடந்து மார்ச்சில் கும்பாபிஷேகம் நடந்தது.

தெப்பத்தை புதுப்பிக்க அரசு ரூ.21 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அந்த நிதி போதவில்லை என்ற நிலையில், உபயதாரர்களும் பணி செய்துள்ளனர். ஆனாலும் குளம் சீரமைக்கும் பணி நிறைவு பெறவில்லை. தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெப்பத்தை புதுப்பிக்கும் பணிகள் முழுமை அடையவில்லை.

தெப்பத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us