sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா கோலாகலம்

/

விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா கோலாகலம்

விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா கோலாகலம்

விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா கோலாகலம்

1


ADDED : மே 02, 2024 05:55 AM

Google News

ADDED : மே 02, 2024 05:55 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. 21 நாட்களுக்கு திருவிழா நடைபெறும். நாள்தோறும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் அம்மன் விதவிதமான அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி எடுத்தல் நேற்று இரவு முதல் துவங்கியது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் விடிய, விடிய அக்னி சட்டி எடுத்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

உருண்டு கொடுத்தல், ஆயிரம் கண் பானை, அலகு குத்தி வருதல் போன்ற நேர்த்தி கடன்களும் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கில் பெண்கள் திரண்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. கிராம கமிட்டியார் தலையிட்டு அனைவரும் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். தொடர்ந்து பாரதியார் நகர், கிராம சாவடி தெரு, மணிநகரம், நாட்டுக்கல், ஆங்கூர்பாளையம் ரோடு, வடக்கு பட்டி, குட்டியாபிள்ளை வீதி, தியாகி வெங்கடாச்சலம் வீதி, போர்டு ஸ்கூல் தெரு, பார்க் ரோடு உள்ளிட்ட பல வீதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி முல்லைப் பெரியாற்றில் கலக்கினர்.

தொடர்ந்து திருவிழா மே 7 வரை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கிராம கமிட்டியாரும், ஹிந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us