/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா கோலாகலம்
/
விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா கோலாகலம்
விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா கோலாகலம்
விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா கோலாகலம்
ADDED : மே 02, 2024 05:55 AM

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. 21 நாட்களுக்கு திருவிழா நடைபெறும். நாள்தோறும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் அம்மன் விதவிதமான அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி எடுத்தல் நேற்று இரவு முதல் துவங்கியது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் விடிய, விடிய அக்னி சட்டி எடுத்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
உருண்டு கொடுத்தல், ஆயிரம் கண் பானை, அலகு குத்தி வருதல் போன்ற நேர்த்தி கடன்களும் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கில் பெண்கள் திரண்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. கிராம கமிட்டியார் தலையிட்டு அனைவரும் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். தொடர்ந்து பாரதியார் நகர், கிராம சாவடி தெரு, மணிநகரம், நாட்டுக்கல், ஆங்கூர்பாளையம் ரோடு, வடக்கு பட்டி, குட்டியாபிள்ளை வீதி, தியாகி வெங்கடாச்சலம் வீதி, போர்டு ஸ்கூல் தெரு, பார்க் ரோடு உள்ளிட்ட பல வீதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி முல்லைப் பெரியாற்றில் கலக்கினர்.
தொடர்ந்து திருவிழா மே 7 வரை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கிராம கமிட்டியாரும், ஹிந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.

