/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் அலுவலக ரோட்டில் இடையூறாக நிறுத்தும் வாகனங்கள் ;பயணிகள், அலுவலர்கள் அவதி
/
கலெக்டர் அலுவலக ரோட்டில் இடையூறாக நிறுத்தும் வாகனங்கள் ;பயணிகள், அலுவலர்கள் அவதி
கலெக்டர் அலுவலக ரோட்டில் இடையூறாக நிறுத்தும் வாகனங்கள் ;பயணிகள், அலுவலர்கள் அவதி
கலெக்டர் அலுவலக ரோட்டில் இடையூறாக நிறுத்தும் வாகனங்கள் ;பயணிகள், அலுவலர்கள் அவதி
ADDED : மே 01, 2024 08:08 AM

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவதால் பஸ் டிரைவர்கள் அவதிக்குள்ளாகுகின்றனர்.
தேனி அரண்மனைப்புதுார் விலக்கு, சிப்காட் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. தேனி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், பெருந்திட்ட வளாகத்திற்கு இந்த திட்டசாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்த திட்டசாலையில் சில மாதங்களுக்கு முன்பு வரை பத்திரபதிவு அலுவலகம் செயல்பட்டது. தற்போது அந்த அலுவலகம் பெருந்திட்ட வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பழைய பத்திர அலுவலகம் செயல்பட்ட பகுதியில் ரோட்டின் இருபுறங்களிலும் கார்கள், டூவீலர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பஸ்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு செல்லும் வாகனங்கள், அரசு அதிகாரிகளின் கார்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் இடையூறாக நிறுத்தப்படும் கார்கள், வாகனங்களை முறைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.