sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவம்

/

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவம்

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவம்

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவம்


ADDED : செப் 15, 2024 12:33 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் வணிக வைசியகுல சங்கத்தில் நடந்த பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெரியகுளம் தென்கரை வணிக வைசியகுல அபிவிருத்தி சங்கத்தில் 44 வது ஆண்டு பிட்டு திருவிழாவை முன்னிட்டு, பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து உற்ஸவர்கள் சொக்கநாதர் பிரியாவிடை அம்மன், மீனாட்சியம்மன், சண்டிகேஸ்வரர், விநாயகர் வணிகவைசிய குல சங்கத்தில் எழுந்தருளினர். ஆன்மிக சொற்பொழிவில் அர்ச்சகர் துரைக்கண்ணன் பேசுகையில்: வணிகவைசியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் சிவபக்தை வந்திபாட்டி. மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கில் கரை உடைந்தது. பாண்டிய மன்னர் கரையை உயர்த்த ஒவ்வொருவரும் ஒரு பகுதியை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டார். வந்திபாட்டிக்கு சிவபெருமான் சிறுவன் வேடத்தில் வேலையாளாக வந்தார். அவரிடம் கூலிக்கு பதிலாக உதிர்ந்த பிட்டினை உண்டார். வைகையாற்று கரையில் வேலை செய்யாமல் ஆட்டம், பாட்டமாக இருந்துள்ளார். இதனை கண்ட பாண்டிய மன்னன், அவரை பிரம்பால் அடித்துள்ளார். உலகில் உள்ள அனைவருக்கும் பிரம்பு அடி விழுந்தது. மன்னர், சிவபெருமனை வணங்கினார்.இதனை வலியுறுத்தி அர்ச்சகர்கள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையை நடத்தினர். சுவாமி, அம்மன் அலங்கரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா நடந்தது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் கணேசன், அலுவலர் சரவணக்குமார் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us