sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்; மறையூரில் மின்தடைக்கு வாய்ப்பு

/

ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்; மறையூரில் மின்தடைக்கு வாய்ப்பு

ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்; மறையூரில் மின்தடைக்கு வாய்ப்பு

ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்; மறையூரில் மின்தடைக்கு வாய்ப்பு


ADDED : ஆக 09, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மறையூருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பங்கள் பல இடங்களில் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளன.

மூணாறில் இருந்து 42 கி.மீ., தொலைவில் மறையூர் உள்ளது. அங்குள்ள சப் ஸ்டேஷனுக்கு மூணாறு வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு 42 கி.மீ., தூரம் ரோட்டில் இரும்பு கம்பங்கள் நடப்பட்டு மின் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவ மழை துவங்கிய பிறகு பலத்த மழையால் மண்சரிவு, மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் பல இடங்களில் சேதமடைந்தன.

மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நகரை ஒட்டி ஜூலை 15ல் மண்சரிவு ஏற்பட்டு மின்கம்பங்கள் சேதமடைந்தன. அது போன்று பல பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மறையூரில் ஒரு வாரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.

இந்நிலையில் நகரை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டு மின் கம்பம் கீழே விழும் நிலையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. இதே போல் பல பகுதிகளில் மின் கம்பங்கள் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளன.

அவற்றை சீரமைக்கவில்லை எனில் அவை சேதமடைந்து மறையூரில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us