நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு போடி அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தொடர்பியல் துறை சார்பில் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.
பேராசிரியர் பால்கனி தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் ராஜமாடசாமி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். போட்டியில் போடி அரசு இன்ஜி., கல்லூரி, தேனி நாடார் சரஸ்வதி இன்ஜி., கல்லூரி, கம்மவார் இன்ஜி.,கல்லூரி உட்பட 5 கல்லூரியில் இருந்து 48 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் 2 இடங்களைபோடி அரசு இன்ஜி.,கல்லூரியும், 3வது இடத்தை போடி சி.பி.ஏ., கல்லூரி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் வசந்த நாயகி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

