/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பம் பணியை மீண்டும் துவக்க கோரிக்கை
/
காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பம் பணியை மீண்டும் துவக்க கோரிக்கை
காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பம் பணியை மீண்டும் துவக்க கோரிக்கை
காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பம் பணியை மீண்டும் துவக்க கோரிக்கை
ADDED : செப் 17, 2024 04:36 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் நிறுத்தப்பட்டுள்ள தெப்பக் குளம் சீரமைக்கும் பணிகளை விரைந்து துவக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கோயில் மிகவும் புராதானமானது. தென் காளஹஸ்தி என்றழைக்கப்படும். இக்கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது. ராகு கேது தம்பதி சகிதமாக தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை இங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த கோயில் திருப்பணிகள் நடந்து சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடைபெறும் போது, தெப்பத்தை தயார் செய்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ தெப்ப பராமரிப்பு பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளது. தெப்பத்தை புதுப்பிக்க அரசு ரூ.21 லட்சம் வழங்கியது. அந்த நிதி பற்றாக்குறையால் உபயதாரர்களும் பணி செய்துள்ளனர். இருந்த போதும், குளம் சீரமைப்பு பணிநிறைவு பெறவில்லை. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தெப்பத்தை சீரமைக்கும் பணியினை விரைந்து முடிக்க ஹிந்து அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் இந்த விஷயத்தில் தலையிட்டு தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். வரும் ஆண்டிலாவது தெப்பத் திருவிழா நடத்தப்படுமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.