/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பறிமுதல் வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷன்களில் இட நெருக்கடி
/
பறிமுதல் வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷன்களில் இட நெருக்கடி
பறிமுதல் வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷன்களில் இட நெருக்கடி
பறிமுதல் வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷன்களில் இட நெருக்கடி
ADDED : செப் 02, 2024 12:11 AM
கம்பம் : போலீஸ் ஸ்டேசன்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பறிமுதல் வாகனங்களை ஏலம் விட மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனிலும் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள், கார்கள், ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் என பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கம்பம் வடக்கு, தெற்கு, உத்தமபாளையம், சின்னமனுார்ஸ்டேசன்கள் மட்டும் குறைந்தது 500 முதல் ஆயிரம் டூவிலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டு கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் செடி கொடிகள் வளர்ந்து பாம்புகள், பூரான்கள்என விஷ ஜந்துக்கள் வாழ்விடமாக மாறி வருகின்றன.
இதனால் போலீஸ் ஸ்டேசன்களில் புகார் தர வருபவர்களும், போலீசாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பறிமுதல் வாகனங்களை ஏலம் விட எஸ்.பி. சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.