sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை

/

சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை

சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை

சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 03, 2024 05:35 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : சுருளியாறு மின் நிலையத்தில் குறைந்த அளவு நீரில் அதிக மின்சாரம் எடுக்க முடியும் என்பதால் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப், சுருளியாறு நீர் மின் நிலையங்கள் உள்ளன. லோயர் கேம்ப் மின் நிலையத்தில் 168 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது.

4 ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் என்பது 42 மெகாவாட்டாக திறன் அதிகரிக்கப்பட்டது. 140 மெகாவாட்டாக இருந்தது 168 மெகாவாட் என திறன் உயர்த்தப்பட்டது.

ஆனால் சுருளியாறு மின் நிலையத்தில் 1978ல் இருந்து 35 மெகாவாட் என்ற நிலையில் உள்ளது. நீர் மின் உற்பத்தியை பொறுத்தவரை, தண்ணீர் கொண்டு வரும் உயரம் முக்கிய காரணியாகும்.

லோயர்கேம்ப்பில் 35 மெகாவாட் உற்பத்திற்கு 400 கன அடி தண்ணீர் தேவைப்படும். ஆனால் சுருளியாறு நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி செய்ய 141 கன அடி போதுமானது.

காரணம் சுருளியாறு மின் நிலையத்தில் 971 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. எனவே சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறன் 35 மெகாவாட் என்பதை 42 மெகாவாட்டாக உயர்த்த வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us