/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி வேலப்பர் கோயில் மகா கும்பாபிஷேக யாகசாலை; வேள்வி பூஜைகள் துவக்கம்
/
சுருளி வேலப்பர் கோயில் மகா கும்பாபிஷேக யாகசாலை; வேள்வி பூஜைகள் துவக்கம்
சுருளி வேலப்பர் கோயில் மகா கும்பாபிஷேக யாகசாலை; வேள்வி பூஜைகள் துவக்கம்
சுருளி வேலப்பர் கோயில் மகா கும்பாபிஷேக யாகசாலை; வேள்வி பூஜைகள் துவக்கம்
ADDED : ஆக 20, 2024 06:58 AM
கம்பம் : கம்பம் சுருளி- வேலப்பர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஆக.,22ல் நடைபெறுவதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள யாகசாலைகளில் நேற்று வேள்வி பூஜைகள் துவங்கின.
கம்பத்தில் வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது சுருளி வேலப்பர் என்ற சுப்பரமணிய சுவாமி கோயில். மூலவராக பாலதண்டாயுத பாணியும், வள்ளி தெய்வானை பக்கவாட்டில் தனி சன்னதியிலும் எழுந்தருளி உள்ளனர். பழமையும், புராதனமும், பிரசித்தி பெற்ற இந்த முருகன் கோயிலில் சஷ்டி, தைப்பூசம் போன்ற நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தன. ஆக. 22 ல் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக பிரமாண்டமான யாக வேள்வி சாலை கோயிலிற்கு முன் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது.
நேற்று மாலை புனித நதிகளிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு தீர்த்த கலசங்கள், முளைப்பாரி நகர் வலம் வருதல் நடைபெற்றது.
இன்று ஆக.20ல் முதற்கால யாக வேள்விகான பூஜைகளும், மூலவர், துணை, பரிவார தெய்வங்களின் சக்தியை திருக் குடத்துக்குள் எழுந்தருளச் செய்தல், அதன் பின் ஆக.21ல் 2ம் கால யாக வேள்வி பூஜைகள் துவங்கும். சிலைகள் பிரதிஷ்டை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்விகள் துவங்கும். அதன்பின் ஆக.22ல் நான்காம் கால யாக வேள்விகளுடன் கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல் நடைபெறும். தொடர்ந்து பேரொளி வழிபாடு, புனித நீர் குட யாத்திரை அனுமதி பெறும் பூஜை நடைபெறும். ஆக.22 ல் காலை 9:30 முதல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளன.
இதற்காக கோயில் எதிரில் வேலப்பர் கோயில் வீதியில் பிரமாண்ட பந்தல் அமைத்து யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் வேலப்பர் கோயில் வீதி மட்டும் இன்றி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. ஏற்பாடுகளை இக்கோயில் முருக பக்த சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

