sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டாஸ்மாக் பார் போட்டியில் மோதல்: ஒருவர் கொலை

/

டாஸ்மாக் பார் போட்டியில் மோதல்: ஒருவர் கொலை

டாஸ்மாக் பார் போட்டியில் மோதல்: ஒருவர் கொலை

டாஸ்மாக் பார் போட்டியில் மோதல்: ஒருவர் கொலை


ADDED : மே 03, 2024 06:19 AM

Google News

ADDED : மே 03, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: டாஸ்மாக் பார் தொழில் போட்டியால் ஏற்பட்ட மோதல் காரணமாக வடுகபட்டியை சேர்ந்த முருகன் கொலை செய்யப்பட்டார். அதே ஊரை சேர்ந்த பிரபுதேவாவை போலீசார் தேடுகின்றனர்.

பெரியகுளம் அருகே வடுகபட்டி தேவர்தெருவைச் சேர்ந்தவர் முருகன் 45. அதே தெருவைச் சேர்ந்தவர் பிரபுதேவா 35. இருவரும் உறவினர்கள். முருகன் ஜெயமங்கலம்- குள்ளப்புரம் ரோடு டாஸ்மாக் கடையில் பார் நடத்தினார். இதேபோல் பிரபுதேவா தேனி அல்லிநகரம் அருகே பின்னத்தேவன்பட்டி டாஸ்மாக்கில் பார் நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபுதேவா, பாரில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 900 மது பாட்டில்களை அல்லிநகரம் போலீசார் கைப்பற்றி, பிரபுதேவாவை கைது செய்து பின் ஜாமினில் விடுவித்தனர். போலீசாருக்கு முருகன் தகவல் கொடுத்ததாக பிரபுதேவா, முருகன் மீது கோபத்தில் இருந்தார். நேற்று இரவு 7:25 மணிக்கு வடுகபட்டி கலையரங்கம் அருகே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பிரபுதேவா அரிவாளால் முருகன் தலையில் வெட்டினார். சம்பவ இடத்திலே முருகன் பலியானார். வடுகபட்டி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென்கரை போலீசில் பிரபுதேவா மீது கொலை வழக்கு பதிவு செய்து டி.எஸ்.பி., சூரக்குமாரன் தலைமையில் பிரபுதேவாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us