sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தென்கரை பாரதி நகரில் தெருநாய்களால் அச்சம் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வலியுறுத்தல்

/

தென்கரை பாரதி நகரில் தெருநாய்களால் அச்சம் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வலியுறுத்தல்

தென்கரை பாரதி நகரில் தெருநாய்களால் அச்சம் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வலியுறுத்தல்

தென்கரை பாரதி நகரில் தெருநாய்களால் அச்சம் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வலியுறுத்தல்


ADDED : ஆக 08, 2024 05:48 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி பாரதி நகரில் திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்து கட்டுக்குள் கொண்டுவர குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

நகரின் விரிவாக்க பாரதி நகர் உள்ளதால் இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் 5 முதல் 10 தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. இவைகள் ஆங்காங்கே வீடுகளின் முன் கூடி உலா வந்து குடியிருப்புவாசிகளை அச்சுறுத்துகிறது.

வெளியே வரும் சிறுவர், சிறுமிகளை திடீரென தெருநாய்கள் சுற்றி வளைப்பது , அக்கம் பக்கத்தினர் விரட்டி பாதுகாக்கின்றனர். திடீரென தெருநாய்களுக்குள் ஆக்கரோஷமாக குரைத்து சண்டையிடுவது பெரியவர்களையும் அச்சமடைய வைக்கிறது.

இது ஒருவகையான அச்சுறுத்தல் என சுதாரித்து சென்றால் மறுபுறம் பசுமாடுகள் கூட்டம் தெருக்களுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகளை முட்டி விரட்டுகிறது. பெரியகுளம் நகர் பகுதியில் மாடு வளர்ப்போர் பாரதி நகரில் மேய்ச்சலுக்காக மாடுகளை அவிழ்த்து விட்டு செல்கின்றனர். காலையில் மேய்ச்சலுக்கு அவிழ்ந்து விடப்படும் மாடுகள் நாட்கள் கணக்கில் இங்கு முகாமிடுகிறது.

மாடுகள் வீடுகளுக்கு முன் இடையூறாக படுத்து போக்குவரத்தில் சிரமம் ஏற்படுத்துகிறது.

தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்து கட்டுப்படுத்த பேரூராட்சி மற்றும் கால்நடை துறை நடவடிக்கை எடுக்க குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டர் ஷஜீவனாவிடம் மனுக்கொடுத்து முறையிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us