ADDED : ஜூலை 19, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கண்டமனூர் அருகே பொன்னம்மாள் பட்டியை சேர்ந்தவர் சங்கவி 21, இவரும் இதே ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் 48 என்பவரும் உறவினர்கள். சங்கவியின் தந்தை உயிருடன் இருக்கும் காலத்தில் இருந்தே ஜெகநாதனுடன் சொத்து தகராறு, முன்விரோதம் இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறில் சங்கவி மற்றும் அவரது அம்மாவை வீட்டின் முன்பு ஜெகநாதன் வீணாகப் பேசி கொலை மிரட்டல் எடுத்துள்ளார்.
சங்கவி புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.