ADDED : மார் 08, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் வடகரை காமாட்சி சந்தினைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத் 48. அரசு போக்குவரத்து டெப்போ அருகே
'எஸ்.ஏ.எஸ்' பெயரில் மாட்டுத் தீவனம் கடை நடத்தி வந்தார். கடையில் புகையிலை பதுக்கி வைத்துள்ளதாக வடகரை போலீஸ் ஸ்டேஷனுக்கு ரகசிய தகவல் சென்றது. இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் கடையில் சோதனையிட்டனர். இதில் மாட்டுத்தீவனம் சாக்கு மூட்டையில் 34.320 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2280 யை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையிலிருந்த ஷேக்தாவூத் இவரது நண்பர் ஷாஜகான் 48. மீது வழக்கு பதிவு செய்து, ஷேக்தாவூதை கைது செய்தனர். ஷாஜஹானிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.