sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


ADDED : மே 26, 2024 04:46 AM

Google News

ADDED : மே 26, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மேகமலை பகுதியில் கனமழை பெய்து வருவதால், சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவ மழையும் பெய்ய துவங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு , இரவங்கலாறு , மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று காலை முதல் முன்னெச்சரிககை நடவடிக்கையாக, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

வனத் துறையின் தடையை தொடர்ந்து அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கவில்லை.

அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள்ஆற்றின் கரையோரங்களில் குளித்து செல்கின்றனர்.

அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தால் மட்டுமே, சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர்தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us