/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டை ஆக்கிரமித்துள்ள முட்செடிகளால் சிரமம்
/
ரோட்டை ஆக்கிரமித்துள்ள முட்செடிகளால் சிரமம்
ADDED : செப் 09, 2024 05:51 AM

போடி : போடி அருகே ராசிங்காபுரம் - மல்லிகர்சாமி கோயில் கரடு வரை செல்லும் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு முட்செடிகள் வளர்ந்துள்ளதால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
போடி அருகே ராசிங்காபுரம் குளத்துப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் மல்லிங்கர்சாமி கோயில் கரடு, ஜக்கம்மாள் கோயில் பகுதி அமைந்து உள்ளது. பள்ளி, கண்மாய், வீடுகளும் இப்பாதையில் அமைந்து உள்ளது. இப்பகுதியில் தென்னை, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு உள்ளனர்.
பிரதோஷம், பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் இந்த ரோட்டில் சென்று வருகின்றனர். இதோடு ரோட்டின் இருபுறமும் முட்செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டின் இருபுறமும் வளர்ந்து உள்ள முட்செடிகளை அகற்றி, ரோடு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.