sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காய்கறி நர்சரி அமைக்க வலியுறுத்தல்

/

காய்கறி நர்சரி அமைக்க வலியுறுத்தல்

காய்கறி நர்சரி அமைக்க வலியுறுத்தல்

காய்கறி நர்சரி அமைக்க வலியுறுத்தல்


ADDED : மார் 01, 2025 06:41 AM

Google News

ADDED : மார் 01, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: காய்கறி நாற்றுகள் வாங்குவதற்கு தோட்டக்கலைத்துறை கம்பம் அல்லது சின்னமனூரில் நர்சரி துவக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் மானியமாக தரப்படுகிறது.

இந்த நாற்றுகளை பெற கூடலூர் முதல் சின்னமனூர் வரையிலான விவசாயிகள், குறைந்தது 50 கி.மீ.,துாரத்தில் உள்ள பெரியகுளம் தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல வேண்டும்.

நாற்றுகளை எடுத்துவர வாகனங்களுடன் செல்ல வாடகை ரூ.3 ஆயிரம் வரை ஆகும். இதனால் விவசாயிகள் அவதிப்பட்டனர்.இப் பிரச்னைக்கு தீர்வு காண சில ஆண்டுகளுக்கு முன் சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பசுமைக்குடிலில் நர்சரி அமைக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டது. ஆனால் அப்பணிகள் நடைபெறவில்லை.

விவசாயிகள் நாற்றுக்களை வாங்குவதற்கு பெரியகுளம் செல்வது தொடர்கதையாகி வருகிறது. நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் போதிய அளவு இடம் உள்ளது.

எனவே தோட்டக்கலைத்துறையினர் கம்பம் அல்லது சின்னமனூரில் நர்சரி துவக்க வேண்டும். இதன்மூலம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வட்டார விவசாயிகள் நாற்றுகள் வாங்க பெரியகுளம் செல்ல தேவையில்லை. பயண நேரம், செலவு, வாகன வாடகை மிச்சமாகிறது.






      Dinamalar
      Follow us