sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறில் பரிதவிக்கும் மக்கள்

/

வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறில் பரிதவிக்கும் மக்கள்

வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறில் பரிதவிக்கும் மக்கள்

வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறில் பரிதவிக்கும் மக்கள்


ADDED : பிப் 23, 2025 05:23 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானை, காட்டு மாடு, புலி, சிறுத்தை உள்பட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

லாரியை வழி மறித்து கடந்த ஒரு மாதமாக மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித் திரியும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு நாட்களாக கூடாரவிளை எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட படையப்பா நேற்று பகல் 1:30 மணிக்கு அப்பகுதிக்கு உரம் ஏற்றி சென்ற லாரியை வழி மறித்து உர மூடைகளை சேதப்படுத்தியது. வனத்துறை அதிரடி படையினர் படையப்பாவை காட்டிற்குள் விரட்டியதால் வேறு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

காட்டு யானைகளை போன்று காட்டு மாடுகளும் குடியிருப்பு பகுதிகளில் அதிகம் நடமாடுகின்றன.

மூணாறு நகரில் உள்ள டாடா மருத்துவமனை வளாகத்தினுள் நேற்று காலை 7:00 மணிக்கு நுழைந்த காட்டு மாடு வெகு நேரம் சுற்றித்திருந்தது. அதனால் மக்கள் அச்சத்துடன் நடமாடினர்.






      Dinamalar
      Follow us