sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகிழ்ச்சி, அச்சம் ஏற்படுத்தும் காட்டு யானைகள்

/

மகிழ்ச்சி, அச்சம் ஏற்படுத்தும் காட்டு யானைகள்

மகிழ்ச்சி, அச்சம் ஏற்படுத்தும் காட்டு யானைகள்

மகிழ்ச்சி, அச்சம் ஏற்படுத்தும் காட்டு யானைகள்


ADDED : ஜூன் 19, 2024 05:17 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறில் காட்டு யானைகள் மகிழ்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

மூணாறு பகுதியில் காட்டு யானைகளை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும்போது உள்ளூர்வாசிகளான தொழிலாளர்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.

மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் காட்டு யானைகளை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருவதுண்டு. குறிப்பாக படையப்பா ஆண் காட்டு யானையை தேடி அலைவதுண்டு.

தவிர மாட்டுபட்டியில் புல்மேடுகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை பயணிகள் பார்க்க தவறுவதில்லை.

காட்டு யானைகளை பார்த்தால் குஷி அடையும் பயணிகள் மகிழ்ச்சியுடன் ஊர் திருப்புவதை காண முடியும்.

தற்போது மாட்டுபட்டியில் முகாமிட்டுள்ள நான்கு காட்டு யானைகளை பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

இது ஒரு புறமிருக்க காட்டு யானைகள் உள்ளதாக அறிந்தால் அஞ்சி நடுங்கும் சூழல் சமீபகாலமாக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இடையே நிலவுகிறது. அதற்கு கடந்த ஜன.23, பிப்.26 ஆகிய நாட்களில் இருவரை கொன்றது காரணமாகும்.

அச்சம்:மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் புதுக்கடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றை கடந்து அருகில் உள்ள சான்டோஸ் காலனி செல்ல பகல் வேளையிலும் கூட மக்கள் அச்சமடைந்தனர்.






      Dinamalar
      Follow us