ADDED : மார் 15, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் கழகம் சார்பில் உலக நுகர்வோர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள் வரவேற்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அம்சங்கள், உரிமைகள், கடமைகள் குறித்து மாவட்ட நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் புதுராஜா பேசினார். நுகர்வோர் நீதிமன்றங்களை நாடி நுகர்வோருக்கான உரிமைகளையும் அநீதி இழைக்கப்பட்டு இருந்தால் நஷ்ட ஈடும் பெற்றுக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. பொருளாதார துறை பேராசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.