sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் நகை திருட்டு


ADDED : ஜூலை 30, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே பொம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, ஒன்றரை ஆண்டாக நரியூத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வருகிறார்.

இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இரு மகன்கள் வெளியூரில் வேலை செய்கின்றனர். ஈஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக கேரள மாநிலம் சாந்தம்பாறை அருகே ஏலக்காய் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். ஜூலை 19ல் ஈஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு அவரது உறவினர் தனலட்சுமி என்பவரிடம் சாவியை கொடுத்துவிட்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்று முன் தினம் ஈஸ்வரியின் உறவினர் போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாகவும் பீரோ கதவும் உடைந்து நிலையில் இருப்பதாகவும் தகவல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து ஈஸ்வரி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ.4.05 லட்சம் மதிப்பிலான 13.5 பவுன் நகைகளை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஈஸ்வரி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us