/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.3.45 கோடி மதிப்பில் 14 புதிய வகுப்பறைகள்
/
ரூ.3.45 கோடி மதிப்பில் 14 புதிய வகுப்பறைகள்
ADDED : ஜூலை 24, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.3.45 கோடி மதிப்பில் 14 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடக்க உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பாலக்கோம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.98.9 லட்சத்தில் 4 வகுப்பறைகள், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 74.22 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள், எரசக்கநாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 1.23 கோடி செலவில் 5 வகுப்பறைகள், தங்கமாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.49.48 லட்சம் மதிப்பில் இரு வகுப்பறைகள் என மொத்தம் ரூ.3.45 கோடி மதிப்பில் 14 வகுப்பறைகளுக்கான கட்டுமானப்பணிகள் நடக்க உள்ளது என்றனர்.