sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு வெள்ளத்தால் 179 எக்டேர் பயிர்கள் சேதம் 

/

பெரியாறு வெள்ளத்தால் 179 எக்டேர் பயிர்கள் சேதம் 

பெரியாறு வெள்ளத்தால் 179 எக்டேர் பயிர்கள் சேதம் 

பெரியாறு வெள்ளத்தால் 179 எக்டேர் பயிர்கள் சேதம் 


ADDED : நவ 06, 2025 07:10 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் வேளாண் பயிர்கள் 172.6 எக்டேர், தோட்டக்கலை பயிர்கள் சுமார் 7 எக்டேர் என மொத்தம் 179 எக்டேர் சேதமடைந்து, 310 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த அக்., 18,19ல் முல்லைப்பெரியாறு, மூலவைகை, கொட்டக்குடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் முல்லைப்பெரியாற்றங்கரையில் உள்ள வேளாண் சாகுபடிநிலங்களில் வெள்ள நீர் உட்புகுந்தது. சில இடங்களில் வெள்ள நீர் இரு நாட்களில் வடிந்தது. ஆனால் பல இடங்களில் வெள்ள நீர் வெளியேற வழியின்றி பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்கள் குறித்து வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் கணக்கிட்டு வந்தனர்.

கணக்கெடுப்பு பணியை அதற்காக வடிவமைக்கப்பட்ட செயலியில் பதிவேற்றி வந்தனர். அதிகபட்சமாக நெல் 148.3 எக்டேர், மக்காச்சோளம் 6.5 எக்டேர், சோளம் 3.5 எக்டர், பருத்தி 1.4 எக்டேர், சிறுதானியங்கள் 12.12 எக்டேர், கம்பு 0.6 எக்டேர், தோட்டக்கலை பயிர்கள் சுமார் 7 எக்டேர் என மொத்தம் 179 எக்டேர் பயிர்கள் சேதமடைந்தனர். இதனால் 310 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us