sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போடி திருக்கல்யாணத்தில் ருசிகரம் ஒரு தேங்காய் ரூ.3.3 லட்சத்திற்கு ஏலம்

/

போடி திருக்கல்யாணத்தில் ருசிகரம் ஒரு தேங்காய் ரூ.3.3 லட்சத்திற்கு ஏலம்

போடி திருக்கல்யாணத்தில் ருசிகரம் ஒரு தேங்காய் ரூ.3.3 லட்சத்திற்கு ஏலம்

போடி திருக்கல்யாணத்தில் ருசிகரம் ஒரு தேங்காய் ரூ.3.3 லட்சத்திற்கு ஏலம்


ADDED : நவ 09, 2024 06:30 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி தேவசேனா சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார்.

செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் ஒரு தேங்காய் ஏலம் விடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு ஒரு தேங்காய் ரூ.66 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இந்த ஆண்டு நடந்த விழாவில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் போடியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், ரங்கநாதபுரத்தை சேர்ந்த பாலநாகேஸ்வரி என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

முருகன் ரூ.3 லட்சத்து ஆயிரம் வரை ஏலம் கேட்டார். பால நாகேஸ்வரி ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஒரு தேங்காய் ஏலம் எடுத்தார். இவரது கணவர் திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.






      Dinamalar
      Follow us