/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையத்தில் நாளை ஆதார் மையம் செயல்படும்
/
உத்தமபாளையத்தில் நாளை ஆதார் மையம் செயல்படும்
ADDED : டிச 21, 2024 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகத்திலும் நிரந்தர ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு ஆதார் புதிய பதிவு, புதுப்பித்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வார நாட்களில் மட்டும் இவை செயல்படுகின்றன.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஏதாவது ஒரு நிரந்தர ஆதார் சேவை மையம் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி (டிச.,22ல்) நாளை உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்த ஆதார் சேவை மையம் செயல்படும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.