/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காசநோய் கண்டறிய கூடுதலாக 'டிஜிட்டல் எக்ஸ்ரே' வாகனம் தேவை
/
காசநோய் கண்டறிய கூடுதலாக 'டிஜிட்டல் எக்ஸ்ரே' வாகனம் தேவை
காசநோய் கண்டறிய கூடுதலாக 'டிஜிட்டல் எக்ஸ்ரே' வாகனம் தேவை
காசநோய் கண்டறிய கூடுதலாக 'டிஜிட்டல் எக்ஸ்ரே' வாகனம் தேவை
ADDED : ஜூலை 17, 2025 11:52 PM
கம்பம்: காசநோயை கண்டறிந்து சிகிச்சையளிக்க வசதியாக நடமாடும் டிஜிட்டல் வாகனம் கூடுதலாக மற்றொரு வாகனம் வழங்க சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் காசநோயை 2025க்குள் முழுமையாக கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து அனைத்து நாடுகளுக்கும் உதவிகள் செய்து வருகிறது.
இந்தியாவில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் கிராமங்களுக்கு சென்று காசநோய் உள்ளதா என்பதை கண்டறிய எக்ஸ்ரே எடுத்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் காசநோய் தடுப்பு பிரிவினர் காசநோய் கண்டறியும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் ஒரு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று 20 முதல் 30 பேருக்கு எக்ஸ் ரே எடுக்கப்படுகிறது.
மேலும் அவர்களிடம் சளி சேகரம் செய்யப்பட்டு, பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக சர்க்கரை, பிரஷர் பாதித்தவர்களையும் டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் அவர்களுக்கு காசநோய் உள்ளதா என்பதை கண்டறிந்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் எக்ஸ்ரே இல்லை.
எனவே கூடுதலாக ஒரு மொபைல் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் இருந்தால், தினமும் கூடுதல் நபர்களை பரிசோதிக்க முடியும்.
எனவே கூடுதலாக ஒரு மொபைல் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.