/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறப்பு
/
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறப்பு
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறப்பு
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறப்பு
ADDED : ஜூன் 28, 2025 06:53 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2050 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்மட்டம் 136 அடியானால் கேரள பகுதிக்கு அணையை ஒட்டியுள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என தமிழக நீர்வளத் துறையினர் அறிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்துபெய்து வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 135 அடியானது. மாலை 4:00 மணிக்கு 135.20 அடியாக உயர்ந்தது (மொத்த உயரம் 152 அடி). நேற்றுநீர்ப் பிடிப்பு பகுதியில் மழை சற்று குறைந்தது. இதனால் காலையில் 5505 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 3800 கன அடியாக குறைந்தது. நீர் இருப்பு 5866 மில்லியன் கன அடியாகும். பெரியாறில் 47.80 மி.மீ., தேக்கடியில் 45.2 மி.மீ., மழை பதிவானது.
நீர் திறப்பு அதிகரிப்பு
ரூல்கர்வ் விதிமுறைப்படி ஜூன் 30 வரை அணையில் 136 அடி மட்டுமே தேக்க முடியும். அதனால் 136 அடியை எட்டுவதற்குள் தமிழக பகுதிக்கு கூடுதல் நீர் திறக்க நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். காலையில் 1867 கன அடியாக இருந்த நீர் திறப்பு மாலையில் 2050 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 1800 கன அடி நீர் லோயர்கேம்பில் மின் உற்பத்திக்காக ராட்சத குழாய் மூலமும், 250 கன அடி நீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. இதையும் மீறி கனமழை பெய்து நீர்மட்டம் 136 அடியானால் நீர்மட்டத்தை நிலை நிறுத்துவதற்காக அணையை ஒட்டியுள்ள ஷட்டர் வழியாக கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.