/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இன்ஜி.,கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
/
இன்ஜி.,கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
ADDED : ஏப் 03, 2025 05:04 AM

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் வளாகத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் பேசினர். கல்லுாரி முதல்வர் மதளை சுந்தரம் வரவேற்றார். கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், வேலைவாய்ப்புத்துறையின் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 130 மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. விழாவினை கல்லுாரி துணைமுதல்வர்கள் சத்யா, மாதவன் வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியன் ஒருங்கிணைத்தனர். மாணவர்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.