ADDED : ஜன 08, 2026 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குள்ளப்புரம் வேளாண் கல்லூரி மாணவிகள் அருண் பிரியா, பாண்டி மீனா, கனிமொழி, தரங்கிணி, வித்தியா, நிரஞ்சனா, ஷோபிகா, சுவேதா, கிருத்திகா, ஷரனா, அமிர்தா உள்ளிட்டவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தேசிய பறவைகள் தினத்தையொட்டி பறவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
வேளாண் சாகுபடியில் பறவைகளின் பங்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பறவைகள் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பது குறித்து விளக்கினர். பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

