sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெங்களுரூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

/

பெங்களுரூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

பெங்களுரூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

பெங்களுரூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது


ADDED : மே 02, 2025 02:00 AM

Google News

ADDED : மே 02, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனியில் பெங்களுரூ வியாபாரியை கடத்தி கொலை செய்த வழக்கில் 8 பேர் கைதான நிலையில் நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மடுவாலாவைச் சேர்ந்தவர் திலீப். இவரும் இவரது சகோதரி ராதா மகன் கலுவாவும் ஆண்டிபட்டி பகுதியில் கண்ணாடி வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு தேனியைச் சேர்ந்த சிப்ஸ் கடை விற்பனையாளர் மோகன் அறிமுகமானார். ஏப்.,15ல் திலீப், கலுவா ஆகியோரை தேனி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு மோகன் வரவழைத்து டூவீலரில் பைபாஸ் பகுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை கடத்தியது. போலி நகைகள் விற்பவர்கள் தானே எனக்கூறி அந்த கும்பல் அவர்களை தாக்கியது. தேனி கருவேல்நாயக்கன்பட்டி தென்னந்தோப்பில் வைத்து மட்டையால் தாக்கினர். கலுவாவை அங்கேயே விட்டுவிட்டு, திலீபை வேறு பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கிருந்து தப்பிய கலுவா பெங்களூரு சென்றார். திலீப்பின் மற்றொரு சகோதரி நிர்மலாவை அழைத்து வந்து தேனி போலீசில் ஏப்.,24ல் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் திலீப்பை அடித்து கொலை செய்து ஜல்லிபட்டி கண்மாய் கரையில் புதைத்தது தெரிந்தது. இக்கொலை வழக்கில் கருவேல்நாயக்கன்பட்டி முகேஷ்பாண்டி 25, ஆகாஷ் 20, முத்துப்பாண்டி 20, மோகன் 30, சக்கரைப்பட்டி முருகன் 45, இளையராஜா 37, முத்தனம்பட்டி சதீஷ்குமார் 32, தேனி சவுமியன் 31, ஆகியோரை போலீசார் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். நேற்று இதில் தொடர்புடைய கருவேல்நாயக்கன்பட்டி மதனை 28, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us