/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காதலிக்கு கட்டாய கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய காதலன் கைது
/
காதலிக்கு கட்டாய கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய காதலன் கைது
காதலிக்கு கட்டாய கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய காதலன் கைது
காதலிக்கு கட்டாய கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய காதலன் கைது
ADDED : ஜூலை 26, 2025 04:11 AM
போடி: தேனி அருகே கருவுற்ற காதலியை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து, சிசு இறப்புக்கு காரணமான வீரபாண்டி சவுராஷ்ட்ரா கல்லுாரி தெரு ஹரிஹரனை 25, போடி தாலுகா போலீசார் கைது செய்தனர்.
ஹரிஹரன், போடி பகுதியில் மகளிர் சுய உதவி குழு கடன்கள் வசூல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இவருக்கும் போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மாத கருவுற்ற பெண்ணை மிரட்டி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட வைத்துள்ளார். இது குறித்து கேட்ட போது, 'ஜாதியை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.