/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி ரூ.19 லட்சம் மோசடி ஏழு பேர் மீது வழக்கு
/
வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி ரூ.19 லட்சம் மோசடி ஏழு பேர் மீது வழக்கு
வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி ரூ.19 லட்சம் மோசடி ஏழு பேர் மீது வழக்கு
வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி ரூ.19 லட்சம் மோசடி ஏழு பேர் மீது வழக்கு
ADDED : ஜன 25, 2025 01:51 AM
தேனி:ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, மதுரையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த போடியை சேர்ந்த 7 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை பாப்பாபட்டி பாண்டிஸ்வரி 46. இவரது மகன் அஜய். படித்து விட்டு அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். அஜய்க்கு போடியை சேர்ந்த சவுமி 32, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அஜய், சவுமியை தனது தாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். சவுமி, போடியை சேர்ந்த சக்திகுமார் 29, எனது நண்பர்,அவருக்கு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைத் தெரியும். அவர் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளார் என தெரிவித்தார். இதனை நம்பிய பாண்டீஸ்வரி 2023ல் போடியில் உள்ள சக்திகுமாரின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சக்திகுமார், தந்தை கனகராஜ் 60, தாய் பஞ்சு 58, பாண்டீஸ்வரி மகனுக்கு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தனர். அவர்கள் கூறிய வங்கிக் கணக்கின் மூலமும், நேரடியாகவும் பாண்டீஸ்வரி ரூ.19 லட்சம் செலுத்தினார். பின் போலியான பணி ஆணை வழங்கினர். ஏமாற்றியதை அறிந்த பாண்டிஸ்வரி, சக்திகுமாரிடம் பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு சக்திகுமார், அவரது சகோதரர் பாலாஜி, நண்பர்கள் முத்துராமன் 34, அருண் 35, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பாண்டீஸ்வரி தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவில்தேனி குற்றப்பிரிவு போலீசார், சக்திகுமார், கனகராஜ், பஞ்சு, சவுமி, பாலாஜி, முத்துராமன், அருண்  மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

