/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு கட்டட சுவரில் வர்ணம் பூசியவர்கள் மீது வழக்கு
/
அரசு கட்டட சுவரில் வர்ணம் பூசியவர்கள் மீது வழக்கு
ADDED : செப் 15, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் கோவில்பட்டி கிராமத்தில் சமுதாயக்கூடம் உள்ளது.
இதன் அருகே அரசுக்கு சொந்தமான கட்டடத்தின் சுவரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கட்சி, ஜாதி சார்ந்த வண்ணங்களை பூசி சுவரின் அழகை சீர்குலைத்து இருந்தனர். கட்சி, ஜாதி வண்ணங்களை அரசு சுவரில் பூசியவர்கள் கோவில்பட்டியை சேர்ந்த பாண்டிவீரன், நவீன், தினேஷ் என்பது தெரிய வந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) அய்யப்பன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

