sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அவதுாறாக பேசிய மூவர் மீது வழக்கு

/

அவதுாறாக பேசிய மூவர் மீது வழக்கு

அவதுாறாக பேசிய மூவர் மீது வழக்கு

அவதுாறாக பேசிய மூவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 28, 2025 05:21 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி, : கோழி திருடியவரை கண்டுபிடித்து பெற்றோரிடம் தெரிவித்ததால் ஜாதியை கூறி அவதுாறாக பேசி, கட்டையால் தாக்கி காயப்படுத்திய மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெரு அய்யம்மாள். இவர் காமக்காபட்டி தென்னந்தோப்பு காவலாளியாக பணிபுரிந்தார். தோப்பில் கெங்குவார்பட்டி இப்ராஹிம் தெரு ரஹ்மான்கான் 24, வளர்ப்பு கோழிகளை திருடினார். இதனை அய்யம்மாள் மகன் குமார், ரஹ்மான்கானின் தந்தை ரபீக்ராஜா, தாயார் பாத்திமாவிடம் தெரிவித்தார். இதனால் டூவீலரில் சென்ற குமாரின் மைத்துனர் ஜெகதீஸ்வரனை கட்டையால் தாக்கிய ரஹ்மான்கான் ஜாதியை கூறி அவதுாறாக பேசினார்.

இதனை தடுத்த ஜெகதீஸ்வரன் மனைவி சிந்தாமணியும் 26, தாக்குதலுக்கு உள்ளானார். காயமடைந்த இருவரும் பெரியகுளம் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜெகதீஸ்வரன் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் ரஹ்மான்கான் உட்பட மூவர் மீது ஜாதியை கூறி அவதுாறாக பேசியதாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us