sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அகமலை மண் சரிவை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவு

/

அகமலை மண் சரிவை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவு

அகமலை மண் சரிவை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவு

அகமலை மண் சரிவை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவு


ADDED : நவ 07, 2024 02:15 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி ஒன்றியம், அகமலை ஊராட்சி கண்ணக்கரை, அகமலை, அண்ணாநகர், சொக்கன் அலை, பனங்கோடை, ஊரடி, ஊத்துக்காடு, குண்டேரி, கானகமிஞ்சி, மருதையனுார், பட்டூர் உட்பட பல மலைக் கிராமங்கள் அடங்கியுள்ளன.

4 ஆயிரம் ஏக்கரில் காப்பி, பலா, எலுமிச்சை, ஆரஞ்சு, அவகோடா உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளத்தில் இருந்து கண்ணக்கரை வழியாக அகமலை செல்லும் ரோட்டில் கணேசன் தோட்டம், லீலாவதி பெண்ட் உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது.

மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன.

இதனால் 15 மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் பாறைகள், மரங்களை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் நேற்று கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு மண் சரிவு சீரமைக்கும் பணியினை விரைந்து முடிக்குமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உடன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சாமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, தாசில்தார் மருதுபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.






      Dinamalar
      Follow us